தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தையை கொன்று தாய் தற்கொலை: கணவர், குடும்பத்தாரிடம் ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை

சேலம்: சேலத்தை அடுத்துள்ள நிலவாரப்பட்டி ஏலக்கரட்டை சேர்ந்தவர் ராஜா (29), கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையத்தை சேர்ந்த ரோஷினி (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிதர்சன் என்ற குழந்தை இருந்தது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அவ்வப்போது ரோஷினியின் பெற்றோர் வந்து தீர்த்து வைத்து வந்துள்ளனர்.
Advertisement

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜா வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். வீட்டில் குழந்தையுடன் இருந்த ரோஷினி, மாலையில் வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரோஷினி தூக்கில் தொங்கியுள்ளார். உடனே ராஜாவிற்கு தகவல் கொடுத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று அவரது உடலை இறக்கியுள்ளனர். குழந்தை நிதர்சனும் இறந்து கிடந்தான். இதனால், குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் ரோஷினி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.இதுபற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி, தாய், மகன் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் பற்றி பனமரத்துப்பட்டி போலீசில் ரோஷினியின் தாய் லதா அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி அமலாஅட்வின் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான 7 ஆண்டிற்குள் இளம்பெண், குழந்தையுடன் இறந்திருப்பதால் சேலம் ஆர்டிஓ அம்பாயிரநாதன் விசாரணையை தொடங்கியுள்ளார். அதில், இறந்த ரோஷினியின் கணவர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் ஆர்டிஓ, டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை அல்லது வேறு வகையில் ரோஷினியை கொடுமை செய்தார்களா?, தற்கொலைக்கு தூண்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Related News