தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக ஏடிஜிபி ஜெயராமனிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீசார் கடந்த ஜூன் 13ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏவான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
Advertisement

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட் வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு பின்னர், விடுதலை செய்யப்பட்டார். இந்த கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா, மணிகண்டன், கணேசன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்த பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமனை ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை சிபிஐக்கு மாற்றப்போவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயராமன் நேற்று காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் முன்பாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி எஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணையில் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏடிஜிபி ஜெயராமன் மறுத்ததாகவும், காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement