தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் இன்று திருச்சி பயணம்: நாளை புதுகையில் 44 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

புதுக்கோட்டை: திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று (9ம் தேதி) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை (10ம்தேதி) காலை 8.45 மணிக்கு வயலூரில் நடைபெறும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.348.43 கோடியில் 44,093 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழா முடிந்த பின் மீண்டும் காரில் திருச்சி வந்து பொன்மலையில் பாவை குழுமங்களின் அன்புச்சோலை என்ற முதியோர் இல்லத்தை மதியம் 1 மணி அளவில் திறந்து வைக்கிறார். அதன்பிறகு திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வரும் முதல்வர் மதிய உணவுக்கு பிறகு விமான நிலையம் சென்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

Advertisement

Advertisement

Related News