முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் கல்வி திட்டத்திற்கு 4 தவணை நிதி ஒன்றிய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
4 தவணையாக வரவேண்டிய நிதி இதுவரையில் வரவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசிடமிருந்து இதுவரையில் நிதி வரவில்லை. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதை சார்ந்து இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் நிதி வராததால், 32,298க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம், வழங்காததால், அவர்களின் வாழ்வாதாரம், மிகப்பெரிய கேள்விக்குறியாகக்கூடிய நிலை உள்ளது.முதல் தவணை என்று சொல்லக்கூடிய நிதியில், கிட்டத்தட்ட ரூ.573 கோடி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு 4வது தவணையாக ரூ.249 கோடி பணத்தை பாக்கி வைத்துள்ளனர்.
* ஹைடெக் ஆய்வுக்கூடங்களுடன் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் புத்தகத்தில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர உள்ளோம். அதற்காக அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வுக்கூடங்களாக மேம்படுத்தப்படும். நமது மாணவர்களை பொறுத்தவரை, உலகில் எந்த டெக்னாலஜி வந்தாலும், அதை நம் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் டெக்னாலஜி மேம்படுத்தப்படும்’ என்றார்.