தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதல்வர் தேசிய கொடி ஏற்றும்போது ஜார்ஜ் கோட்டையில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்த ஆசாமி கைது

சென்னை: முதல்வர் கொடி ஏற்றும் போது புனித ஜார்ஜ் கோட்டையில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் செங்கல்பட்டில் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அதை நானே நேரில் வந்து நிகழ்த்துவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சுதந்திர தின விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் முதல்வர் இல்லம் அருகே தீவிர சோதனை நடத்தப்பட்டது. பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது.  மேலும், இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மயூரை சேர்ந்த கணேஷ் என்றும், இவர் ரியல் எஸ்ேடட் தொழில் செய்து வந்ததும், தற்போது தொழில் இழப்பு காரணமாக மது போதைக்கு அடிமையாகி முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.  அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக இரவோடு இரவாக கணேஷை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.