முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்
சென்னை: திருச்சி மாவட்டம், சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் ‘பெரியார் உலகம்’ பணிக்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 1 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
Advertisement
தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ.1,70,20,000-ஐ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினேன். பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement