தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் சமூகநீதி சுடரை முன்னின்று பாதுகாத்து இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: வீடியோ வெளியிட்டு திமுக பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை முன்னின்று பாதுகாத்து, இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக பெருமிதம் கொண்டுள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தள பதிவில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: 100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் ஏற்றிய சமூகநீதி என்னும் நெருப்பு இன்னும் சுடர் விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. பெரியாரோடு இந்த பெருநெருப்பு அணைந்து விடும் என இன எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், சமூகநீதி சுடரை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா பெற்று ஆட்சி அமைத்தார். அண்ணாவின் ஆட்சி விரைந்து முடிந்து விட்டது. இனி நெருப்பு அணைந்து விடும் என அதே இன எதிரிகள் நினைத்தனர்.

Advertisement

அவர்களின் எண்ணத்தை தனது சமூகநீதி ஆட்சி மூலம் பொய்யாக்கி சுக்குநூறாக உடைத்தார் கலைஞர். எளியவர்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும், எதிரிகளுக்கு எரி கல்லாகவும் எரிந்தது கலைஞர் கையில் தந்த அண்ணாவின் சமூகநீதி சுடர். பெரியாரின் திராவிட கருத்தியலை ஏந்தி, அண்ணா வழியில் கலைஞர் தந்த சமூகநீதிச் சுடரை அடுத்தகட்டத்திற்கு சமூகநீதி 2.0 என எடுத்து சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை முன்னின்று பாதுகாத்து இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement