தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு, ஈட்டி, வட்டு எறிதலை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: முதலமைச்சர் கோப்பை போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதலை சேர்க்கக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்த வெங்கடாசலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு குண்டு எறிதல், ஈட்டி எறிதல் பயிற்சி அளித்தேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு தடகள பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் இடம் பெற்றிருந்தன. கடந்த 4 ஆண்டுகளாக தடகளப் பிரிவில் இந்த விளையாட்டுகளை நீக்கிவிட்டனர். எனவே, 2025-26ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டு எறிதல் ஆகிய போட்டிகளையும் சேர்த்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், போட்டிகளில் விளையாட்டுகளை சேர்ப்பது என்பது அரசின் முடிவாகும். மனுதாரரின் கோரிக்கை இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அதே நேரம் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளை போட்டிகளில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிப்பதை இந்த நீதிமன்றம் தடுக்காது என உத்தரவிட்டுள்ளனர்.

Related News