தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது

சென்னை: முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். ஆழ்வார்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். சோதனையில் அது புரளி என தெரிந்தது. போலீசாரின் விசாரணையில், மர்ம போன் செய்தவர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்பன்(36) என தெரியவந்தது. இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டுகள் விற்பனை செய்து வருகிறார். போதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

Advertisement

உடனே போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்திய போது, 2020ல்கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் 2021ல் முதல்வர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் இவர் கைதானவர் என்பது தெரிந்தது. தேனாம்பேட்டை போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து இனி இதுபோல் வெடி குண்டு மிரட்டல் விடுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டு விடுவித்தனர்.

Advertisement