தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவும் ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது . செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி இருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் புதிய தொழில் முதலீடு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் முதல் வாரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், பல்வேறு புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிதாக தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய திட்டங்கள், தொழில் விரிவாக்கங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட 3 கூட்டணிக் கட்சிகளும் நேரில் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தன.

 

Related News