தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேற்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற பின் மோடியின் காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்: வீடியோவை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பாட்னா: பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதால், முதல்வரின் பதவியேற்பு விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விழா முடிந்ததும் டெல்லிக்குத் திரும்ப பாட்னா விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவரை வழியனுப்ப வந்த முதல்வர் நிதிஷ் குமார், மரியாதை நிமித்தமாக திடீரென பிரதமர் மோடியின் கால்களைத் தொட முயன்று கீழே குனிந்தார்.இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, நிதிஷ் குமார் காலில் விழுவதைத் தடுக்கும் விதமாக, உடனடியாக அவரது கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, கை குலுக்கி சில வார்த்தைகள் பேசினார்.

Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பான காணொலியை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் அதிகப்படியாக அடிபணிந்து போவதாகக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் காலில் நிதிஷ் குமார் விழுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் தர்பங்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும், அதே ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும், ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போதும் அவர் பிரதமரின் காலைத் தொட முயன்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தர்பங்கா நிகழ்ச்சியின்போது, நிதிஷ் குமாரை ‘பிரபல முதல்வர்’ என்று பாராட்டிய பிரதமர் மோடி, பீகாரில் ‘காட்டு தர்பார்’ ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை நிறுவியவர் என்றும் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News