தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாநில நிர்வாகி கைது: நெல்லையில் சுற்றிவளைப்பு

Advertisement

பெரம்பூர்: தமிழகத்தில் பாஜ சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பெரும்பாலான கூட்டங்களில் பட்ஜெட் குறித்து எந்த ஒரு கருத்தையும் விவாதிக்காமல் முழுக்க முழுக்க தமிழக அரசையும், தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரையும் பாஜவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் 13வது மத்திய குறுக்கு தெருவில் பாஜ சார்பில், பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கராத்தே தியாகராஜன், வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார்.

மேலும் தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த கண்டனம் எழுந்தன. இதையடுத்து, எம்கேபி நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, நெல்லையில் பதுங்கி இருந்த வியாசர்பாடி காந்தி நகர் 6வது தெருவை சேர்ந்த கண்ணனை (45) நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையி அடைத்தனர்.

Advertisement