தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

திருப்போரூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு என 5 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க 16221 பள்ளி மாணவர்களும், 6951 கல்லூரி மாணவர்களும், 717 மாற்றுத்திறனாளிகளும், 744 அரசு ஊழியர்களும், பொதுப்பிரிவில் 14018 நபர்களும் என மொத்தம் 38651 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார்.

Advertisement

அமைச்சர் தா.மோ.அன்பரசன், பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளை ஆடி, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைத்தார். இந்த, போட்டிகள் மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 10ம்தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், மூன்றாம் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். அதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News