தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு; கடவுள் தான் செய்ய வைத்தார்: டெல்லி வழக்கறிஞர் பேட்டி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதாக கைதாகி பின்னர் விடுக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோருக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. டெல்லி மயூர் விஹாரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

Advertisement

விஷ்ணு சிலையை சீரமைக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம்16ம் தேதி தலைமை நீதிபதி அளித்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. மனுதாரரின் கோரிக்கையை அவர் கேலி செய்தார். மனுதாரருக்கு நீங்கள் தீர்வை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கிண்டல் செய்யக் கூடாது. அது என்னை காயப்படுத்தியது. தலைமை நீதிபதியின் அந்த செயலுக்கான எதிர்வினைதான் எனது செயல்.

அதற்காக நான் எந்த வருத்தமும் அடையவில்லை. கடவுள் உத்தரவுப்படி நான் அச்செயலை செய்துள்ளேன். நான் எம்எஸ்சி, பிஎச்டி, எல்எல்பி படித்துள்ளேன். படிப்பில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளேன். நான் ஒன்றும் போதைக்கு அடிமையானவன் கிடையாது. எனது விரக்தியை இப்படி காட்டி உள்ளேன். தலைமை நீதிபதி தலித் என்பதால் அவருக்கு சாதகமாக பேசப்படுகிறது. அவர் ஒன்றும் தலித் அல்ல. முதலில் அவர் சனாதன இந்து. பின்னர் தனது நம்பிக்கையை துறந்து புத்த மதத்தை தழுவியவர் என்றார்.

* ‘நீதிபதிகளின் கருத்துகள் தவறாக பரப்பப்படுகிறது’

இந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி கவாய், ‘‘நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்கள் கூட சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படுகிறது. ஒரு வழக்கு விசாரணையின் போது எனது சக நீதிபதி வினோத் சந்திரன் ஏதோ கருத்தை தெரிவிக்க முயன்றார். அதை நான் தடுத்தேன். தனிப்பட்ட முறையில் என்னிடம் மட்டும் கூறுமாறு சொன்னேன். ஏனென்றால் சமூக ஊடகங்களில் என்ன மாதிரியாக அவரது கருத்துக்கள் பரப்பப்படும் என்பது தெரியாது’’ என்றார்.

Advertisement

Related News