தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்: படம் பிடித்த விசிக நிர்வாகி மீது தாக்குதல்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை சகஜானந்தா தெருவை சேர்ந்தவர் இளையராஜா (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயிலில் உள்ள கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு ஆயிரங்கால் மண்டபம் அருகே ஒரு திடலில் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதை பார்த்த இளையராஜா, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். உடனே தீட்சிதர்கள், வீடியோவை அழிக்காவிட்டால் செல்போனை உடைத்து விடுவோம் என்று கூறி, இளையராஜாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கி செல்போனை பிடுங்கி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Advertisement

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இளையராஜா புகார் அளித்தார். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் கோயில் தீட்சிதர்களை உடனே கைது செய்ய வேண்டும், பக்தர்களையும் பொதுமக்களையும் அவதூறாக பேசி வரும் தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், கோயில் தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News