அகில இந்திய தேர்வுகளை ஒன்றிய அரசே தான் நடத்த வேண்டுமா? என ப. சிதம்பரம் கேள்வி : தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தல்
Advertisement
முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நீட் தேர்வை தாங்களே நடத்தி கொள்வதற்கான அதிகாரத்திற்காக மாநிலங்கள் போராட தொடங்கி உள்ளன என்றும் ப. சிதம்பரம் சுட்டி காட்டி உள்ளன. நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கான ஒன்றிய நிர்வாகத்தை கடுமையாக சாடி உள்ள ப.சிதம்பரம், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ராஜினமா செய்வதற்கு பதிலாக நீட் தேர்வு முறையை நீக்குவதற்கான பரிந்துரையை பிரதமர் மோடிக்கு தர்மேந்திர பிரதான் அளித்தால் தமக்கு மகிழ்ச்சி தான் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement