தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி பகுதி சாலையில் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ்கள் அதிக அளவில் குவிந்து கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி போலி சான்றிதழ்கள் தயாரித்த சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் (39) மற்றும் சிதம்பரம் மீதிகுடி மெயின்ரோடு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த நாகப்பன் ஆகிய இருவரும் கைது செய்தனர்.யப்பட்டனர். இருவரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி பண்டல், பண்டலாக போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர். பெயர் மற்றும் பாடப்பிரிவுகள் எழுதப்பட்ட 500க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், போலி சீல்கள், லேப்டாப், பிரிண்டர், கம்ப்யூட்டர், போலி ஐடி கார்டுகள், செல்போன்கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியவற்றை கிள்ளை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலி சான்றிதழ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement

Advertisement