தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதம்பரம் அருகே லால்புரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை
Advertisement

சிதம்பரம் : புறவழிச்சாலையில் சேதமடைந்துள்ள மின்மாற்றி கம்பங்களை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மின்மாற்றியின் மூலம் தான் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கும், சுற்றுவட்டார மக்களுக்கும் மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல நாட்களாக மின்மாற்றியின் ஒருபுறம் உள்ள கம்பமானது சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.

இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலக பணிக்கு செல்வர்கள் உட்பட பல தரப்பினரும் ஒருவித அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.

மேலும், பலத்த மழை பெய்தாலும், காற்று அதிகமாக வீசினாலும் இந்த மின்மாற்றி முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது. எனவே மழைக்காலம் வருவதற்குள் உடனடியாக இந்த மின்மாற்றி கம்பங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News