தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தீஸ்கரில் ரிசர்வ் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Advertisement

பிஜாப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையின் பி.எஸ்.எஃப் மற்றும் டி.ஆர்.ஜி பணியாளர்களின் கூட்டுக் குழுவால் கான்கர் பகுதிகளில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிஜாப்பூர், மார்ச் 20: சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான புதிய தாக்குதலில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 22 பேர் இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், கான்கர் பகுதிகளில் நான்கு மாவோயிஸ்டுகள் மாநில காவல்துறையின் பி.எஸ்.எஃப் மற்றும் டி.ஆர்.ஜி பணியாளர்களின் கூட்டுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறுதியாக வந்த தகவலின்படி கான்கரில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஜாப்பூரில் நடந்த மோதலில் ஒரு டி.ஆர்.ஜி வீரரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் காலை 7 மணியளவில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் (பிஜாப்பூரில்) பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து 18 நக்சலைட்களின் உடல்களும், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் தனது சமுக வலைதள பதிவில்:

நக்சல் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் திசையில் இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் கான்கேர் ஆகிய இடங்களில் நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வரும் மோடி அரசு, சரணடைவது முதல் ஒருங்கிணைப்பு வரை அனைத்து வசதிகள் இருந்தும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 3-1ம் தேதிக்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News