தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டீஸ்கரில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ளநோட்டு பறிமுதல்: இயந்திரங்களும் சிக்கின

சுக்மா: சட்டீஸ்கரில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ளநோட்டுக்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கோராஜ்குடா கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்த கூட்டுக்குழு நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டது.
Advertisement

அப்போது, பாதுகாப்பு படையினரை பார்த்ததும் அங்கிருந்த நக்சலைட்கள் சிலர் வனப்பகுதியில் தப்பி ஓடினர். அந்த இடத்தில் ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம், பிரிண்டர், இன்வெர்டர் இயந்திரம், பிரிண்டர் மை, 4 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சுக்மா போலீஸ் எஸ்பி ஜி.சாவன் கூறுகையில், ‘‘கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக நக்சலைட்கள் அச்சடித்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கிடைத்துள்ள முக்கியமான வெற்றி. நக்சலைட்டுகள் நீண்ட காலமாக பஸ்தார் பிராந்தியத்தின் உள்பகுதிகளில் வாரச் சந்தைகளில் கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தி அப்பாவி பழங்குடியினரை ஏமாற்றி வருகின்றனர். மேலும், கள்ள நோட்டுக்களை அச்சடித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

Advertisement