தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்ட மூவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்களின் கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்பொழுது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை ஓய்ந்த பிறகு, சம்பவ இடத்தில் இருந்து கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களுடன், ஒரு துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் சில அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் அடையாளம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட மொத்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Related News