தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு நகராட்சியில் சேப்பாட்டி அம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி நத்தம் பகுதியில் இன்று காலை சேப்பாட்டி அம்மன் கோயிலில் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு நகராட்சி நத்தம் பகுதியில் வீற்றிருக்கும் சேப்பாட்டி அம்மன் கோயில், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல், கோயில் வளாகத்திலேயே நடந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு இன்று காலை தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. தேரில் மலர் மற்றும் ஆபரண அலங்காரத்துடன் சேப்பாட்டி அம்மன் அமர்ந்து வீதியுலாவாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு நகரில் தேர் வீதியுலா வந்தது. இன்றிரவு செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டு, நாளை காலை மீண்டும் வீதியுலாவாக வரும். நாளை இரவுதான் தேர், கோயில் வளாகத்தில் நிலைநிறுத்தப்படும். விழாவில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்‌, கவுன்சிலர்கள், மாவட்ட அறநிலையத்துறை அதிகாரி சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News