தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருணுடன் கடலோர பாதுகாப்பு ஐஜி சந்திப்பு: கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை

சென்னை: கடலோர பாதுகாப்பு மண்டல ஐஜி டானி மைக்கேல், சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது கடல் மார்க்கமாக போதை பொருள் தடுப்பது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, கடல் வழியாக போதை பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை கடத்துதல், திருவொற்றியூர் முதல் நீலாங்கரைக்கு இடையேயான சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் உளவுத்தகவல்களை பகிர்வதில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பொருட்களை கடத்தலை தடுப்பது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி கலந்துரையாடுவதற்கும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பதற்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆலோசனைக்கு பிறகு ஐஜி டானி மைக்கேல், போலீஸ் கமிஷனர் அருணுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
Advertisement

Advertisement