தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

 

சென்னை: சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம், வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சிக்னல்களின் நேரத்தை தானாக மாற்றும். தற்போதைய சிக்னல்கள் 60-90 வினாடிகளுக்கு ஒருமுறை மாறுகின்றன. ஆனால், இந்த புதிய அமைப்பு, வாகனங்கள் அதிகம் உள்ள பாதைகளில் பச்சை விளக்கு 120 வினாடிகள் வரை நீடிக்கும்; வாகனங்கள் குறைவாக உள்ள இடங்களில் 30 வினாடிகளாக குறையும்.

இதனால், தேவையற்ற நிறுத்தங்கள் தவிர்க்கப்படும். முதற் கட்டமாக முக்கிய பாதைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இந்த அமைப்பு முதலில் சென்னையின் முக்கிய பாதைகளான அண்ணா சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, சர்தார் படேல் சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, டெய்லர்ஸ் சாலை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும். ஈ.வி.ஆர். சாலையில் வேப்பேரி, ஈகா தியேட்டர் உள்ளிட்ட ஆறு சந்திப்புகளில் இந்த அமைப்பு ஏற்கனவே சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளது.