செஞ்சி அருகே பைக் -அரசு பஸ் மோதல் சென்னை தம்பதி, மகள் பலி:இறுதி சடங்கிற்கு வந்தபோது சோகம்
Advertisement
தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து துரைக்கண்ணு குடும்பத்துடன் பைக்கில் நள்ளிரவு இரண்டு மணிக்கு செஞ்சிக்கு புறப்பட்டார்.
ஒரு பைக்கில் அவரும், மனைவி பச்சையம்மாள், மகள் கோபிகாவும், மற்றொரு பைக்கில் மகன் குணசேகரும் சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் செஞ்சி-திண்டிவனம் சாலை வல்லம் தொண்டியாற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே செஞ்சியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து, துரைக்கண்ணுவின் பைக் மீது மோதியது. இதில் துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னால் மற்றொரு பைக்கில் வந்ததால் குணசேகர் உயிர் தப்பினார். பெற்றோரும் தங்கையும் பலியானதை பார்த்து அவர் பித்து பிடித்தது போல கதறினார். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.
Advertisement