தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து மற்றும் சவுதி அரேபியாவுக்கும், உள்நாட்டு முனையத்தில் துர்காப்பூருக்கும் இடையே கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், பாங்காக்கிலிருந்து சென்னைக்கும் 2 விமான சேவைகளை புதிதாக கடந்த 15ம் தேதியில் இருந்து இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement

அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் தமாமிற்கும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே 2 விமான சேவைகளை வரும் ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயக்கப்படுகிறது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதைப்போல் துர்காப்பூரிலிருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News