தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை பயிற்சி முகாமுக்கு வந்தபோது லாரி மீது கார் மோதலில் ஆசிரியை உள்பட 2 பேர் பலி: ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்து முதல்வர் உத்தரவு

விழுப்புரம்: சென்னையில் நேற்று நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ராம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியை பூவிழி(31), விழுப்புரம் காரணை பெரிச்சானூர் அரசு பள்ளி ஆசிரியைகள் சிவரஞ்சினி(38), மெகருன்னிஷா(47), கவுசல்யா(23) ஆகியோர் பண்டசோழநல்லூரை சேர்ந்த சூர்யா என்பவரின் காரில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுடன் கணவர்கள் ஷாகுல்அமீது(52), முருகன், எல்லப்பன் உள்ளிட்டவர்களும் வந்தனர். காரை சூர்யா ஓட்டினார்.

Advertisement

விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் என்ற இடத்தில் சென்றபோது, ராங் ரூட்டில் சென்னை-திருச்சி மார்க்கமாக காரை ஓட்டியதில், சென்னையில் இருந்து திருச்சி டால்மியாபுரம் சிமென்ட் கம்பெனிக்கு வந்த லாரி மீது கார் மோதியது.  இதில் ஆசிரியை மெகருன்னிஷாவின் கணவர் ஷாகுல்அமீது, ஆசிரியை சிவரஞ்சினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் சூர்யா, ஆசிரியைகள் உள்பட 6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News