சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் பணியாற்ற மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
Advertisement
இந்த பதவிக்கு, குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். 1.7.2025 அன்று 18 வயது மேல் உள்ளவர்களாகவும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பத்துடன் சுய விபரங்கள் அடங்கிய படிவத்தை இணைத்து இம்மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது add1cophqrs4@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement