தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை 330 மெகாவாட் மின் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் எண்ணூர் அருகே அமைக்கும் 330 மெகாவாட் மின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம், சுற்றுச்சூழல் அனுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. மேற்கண்ட உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் சபரீஸ் சுப்ரமணியம் ஆகியோர், “இந்த 330 மெகாவாட் மின் திட்ட பணிகளுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 17ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டுவர ஐந்து கிமீ தூரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது.

அதில் 647 மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிவடைய உள்ளன. எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டனர். தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தமிழ்நாடு அரசு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்தார். பொதுநலன் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement