தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கலைவாணர் அரங்கில் 8ம் தேதி பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 8ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்துவம் மற்றும், மக்கள் நல்வாழ்வு துறை சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து அச்சு ஊடகம், காட்சி ஊடகம், செய்தி முகமை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

Advertisement

பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கின்றனர்.

இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வருகிற 8ம் தேதி (சனிக்கிழமை) சென்னை, கலைவாணர் அரங்கில் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது. முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இதய மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.

Advertisement

Related News