தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானு கேரளாவுக்கு மாற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதி பதவியேற்ற நீதிபதி நிஷா பானு சிவில், கிரிமினல் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாய வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவராகவும், தமிழ்நாடு மகளிர் வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகவும் பதவி வகித்தவர்.

Advertisement

சென்னை உயர் நீதிமன்ற பிரதான அமர்வு மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பரிந்துரையை அனுப்பியது.

இதை பரிசீலித்த ஜனாதிபதி, நீதிபதி நிஷா பானுவை கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதி நிஷா பானு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள் 21 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News