இன்று முதல் சென்னையில் அகில இந்திய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ்
அர்ஜூன் அக்னிஹோத்ரி, அமித்பால் கோஹ்லி, அமித் சிங், சாஹில் வோரா, சவுரப் நாயர், ஹரிந்தர்பால் சிங், அங்கூர் குப்தா, சாலியா பிரதீக், ஷிபானி பிலிப், கனிகா பிரேம்நாரயண், ராஜீவ் ரெட்டி என தேசிய அளவிலான முன்னாள் நட்சத்திர வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகளுடன், மொத்தம் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்சிசி வளாகத்தில் நடைபெறும்.