தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய மக்கள்

சென்னை: பெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகளே தெரியவில்லை. முன்னதாக நேற்று முன்தினம் புயல் உருவாகிவிட்டது என்று சொன்ன உடனே, மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்த தொடங்கினார்கள்.
Advertisement

நேற்று காலைக்குள் ஏராளமான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. தரையில் நிறுத்தினால் பல ஆயிரம் ரூபாயை சர்வீஸ்க்காக கட்ட வேண்டியதிருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பிற்காக கார்களை நிறுத்தி உள்ளனர். வேளச்சேரி பாலத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கரணை பாலத்திலும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். உண்மையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையின் போது, பெரிய பாதிப்பினை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதி மக்கள் சந்தித்தார்கள்.

இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. அதுபோன்ற பாதிப்பு இப்போது ஏற்படாது என்றாலும், புயல் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவது ஒருபுறம் எனில், புயல் கரையை கடக்க தாமதம் ஏற்பட்டால், இந்த பகுதியையைத் தான் கடந்த ஆண்டு போலவே பாதிக்கும் என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. அதனால் தான் மக்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேளச்சேரி, பள்ளிக்கரணை பாணியை பின்பற்றி நேற்று சென்னை மேம்பாலம் பலவற்றிலும் பாலங்களில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததை காண முடிந்தது.

Advertisement