தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை நகரில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை

சென்னை: சென்னை நகரில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்த நிலையில், இன்று அதிகாலையிலே இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய சாலையில் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisement

வளிமண்டலத்தில் காற்று வேறுபாடு காரணமாக கனமழை பெய்வதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம், அடையாறு, ஆர்.ஏ.புரம் பகுதிகளில் 50 நிமிடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் காலை 9 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது. பகலில் வெயில் காணப்பட்டாலும் இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் நாளை பகல் நேரத்தில் வெயில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Advertisement