சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை!!
சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.480 உயர்ந்தது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு காலையில் ரூ.30 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.60 உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600க்கும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,950க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.161க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement