சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதி செய்யும்: - முதல்வர் உறுதி
Advertisement
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என வடசென்னையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம். 1967-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன்.
இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு-க்கு பாராட்டுகள். ‘வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதி செய்யும்’! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement