தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மராத்தான் ஓட்டம்

சென்னை: தேசிய நுகர்வோர் நாள் மற்றும் உலக நுகர்வோர் உரிமை நாளினைக் கொண்டாடிடும் பொருட்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்வி நிறுவனங்களில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலமாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement

அதன் ஒரு பகுதியாக, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மராத்தான் ஓட்டம் இன்று (15.03.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இம்மராத்தான் ஓட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்கேற்றனர்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இம்மராத்தான் போட்டியினை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை தீவுத்திடலிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட இம்மராத்தான் போட்டி தீவுத்திடலில் ஆரம்பித்து அண்ணாசாலை, சிவானந்தா சாலை வழியாகச் சென்று திரும்பவும் தீவுத்திடலுக்கு வந்து நிறைவு பெற்றது.

இம்மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ/மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் வழங்கப்பட்டன. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு, மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் த.மோகன். மற்றும் உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News