தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னையில் இன்று முதல் சர்வதேச செஸ் போட்டி: 16ம் தேதி வரை நடக்கும்

சென்னை: சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் இப் போட்டிகள் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று முதல் ஆக. 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த 2 போட்டிகளிலும் தலா 10 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியர்களை தவிர வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் 10 கிராண்ட் மாஸ்டர்களும், இந்தியர்கள் மட்டும் களம் காணும் சேலஞ்சர் பிரிவில் 9 கிராண்ட் மாஸ்டர்களும், ஒரு சர்வதேச மாஸ்டரும் விளையாட உள்ளனர். கிராண்ட் மாஸ்டர்ஸ் பிரிவில் வீரர்களில் கார்த்திகேயன் முரளி, பிரணவ் வெங்கடேஷ் ஆகியோரும், சேலஞ்சர்ஸ் பிரிவில் எம்.பிரனேஷ், ஆர்.வைஷாலி, அதிபன் பாஸ்கரன், ஜி.பி.ஹர்ஷ்வர்தன் என 7 தமிழ்நாடு ஆட்டக்காரர்களும் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கார்த்திகேயன் முரளி இந்த முறை மாஸ்டர்ஸ் பிரவில் களமிறங்குகிறார். அதே நேரத்தில் மாஸ்டர்ஸ் பிரிவின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் இந்த முறை விளையாடவில்லை. அதேபோல் முதல் சாம்பியன் குகேஷ் தொம்மராஜியும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. போட்டிகள் தினமும் பிற்பகலில் தொடங்கும். ரவுண்ட் ராபின் முறையில் 9 சுற்றுகளாக போட்டி நடைபெறும். மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய்.

Related News