சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது!
11:00 AM Aug 12, 2025 IST
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது. தீ பாதிப்பு எதுவும் இல்லை என விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் உராய்ந்து அதிகப்படியான புகை எழும்பியது. சரக்கு விமானங்கள் தரையிறங்கும் போது இது வழக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.