தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: பயணிகள் உள்பட 109 பேர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. பின்பு விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்ததும் விமானம் தாமதமாக பெங்களூரு புறப்பட்டு சென்றது. விமானி தகுந்த நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 104 பயணிகள் உள்பட 109 பேர் உயிர் தப்பினர்.

Advertisement

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 104 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 109 பேர் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து அந்த விமானம் புறப்பட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் விமான பொறியாளர்கள் முயற்சி மேற்கொண்டு, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்தனர்.

அதன்பின்பு அந்த விமானம் சுமார் ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக நேற்று பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்த 104 பயணிகள் உள்பட 109 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News