தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இந்தோனேசிய ராணுவ விமானங்கள் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு

சென்னை: இந்தோனேசியா நாட்டு ராணுவ விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் திடீரென தரை இறங்கிவிட்டு, மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்தோனேசியா நாட்டு ராணுவ விமானங்கள், நேற்று முன்தினம் ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு சென்று விட்டு, பின்பு மாலையில் மீண்டும் இந்தோனேசியா நாட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம், சென்னை வான்வெளியை நெருங்கிய போது, அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகளுக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து விமானத்தை தரையிறக்கி, சில மணி நேரம் ஓய்வெடுத்த பின்பு மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் முடிவு செய்தனர். அப்போது இந்தியாவின் சென்னை விமான நிலையம் அருகில் இருப்பதை அறிந்து, இந்தோனேசியா ராணுவ விமானத்தின் விமானிகள், டெல்லியில் உள்ள இந்திய விமான விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தை ஓய்வுக்காக, சென்னையில் தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டனர். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தலைமை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அந்த இந்தோனேசியா ராணுவ விமானம் சென்னையில் தரையிறங்க, அனுமதிக்கும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து அந்த ராணுவ விமானம் சென்னை பழைய விமான நிலைய பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் தரையிறங்கி, தனி விமானங்கள் நிற்கக்கூடிய, ரிமோட் பே பகுதியில் விமானத்தை நிறுத்தினார்கள்.

இந்தோனேசியாவை சேர்ந்த 3 ராணுவ விமானங்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரையில் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து அவசரமாக தரையிறங்கின. 35 பேர் இருந்தனர். நேற்று காலை மீண்டும் சென்னையில் இருந்து இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றனர். ஒரேநேரத்தில் மூன்று இந்தோனேஷியா ராணுவ விமானங்கள் அபுதாபியில் இருந்து, இந்தோனேசியா நோக்கி சென்ற போது, ஓய்வுக்காக ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு வந்து தரையிறங்கி விட்டு, நேற்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் இந்தோனேசியா சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News