தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை சோதனைக்கு பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம்: ஆகஸ்ட் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கட்டணம் செலுத்தி பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் ட்ராவலர் ப்ரோக்ராம் [FTI-TTP] என்ற புதிய திட்டம் ஆகஸ்ட் முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாஸ்ட்டிராக் இமிகிரேஷன்-ட்ரஸ்டட் ட்ராவலர் புரோகிராம் [FTI-TTP] என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த புதிய திட்டத்தில் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய பயணிகள் மற்றும் பூர்வீக இந்தியர்களாக (overseas citizen of India) இருந்து, தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே பலன் பெற முடியும்.
Advertisement

இந்த திட்டத்தில் பலன் பெற விரும்புபவர்கள், பயணம் செய்வதற்கு முன்னதாகவே, அதற்கான தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில், தங்களை பதிவு செய்து இணைத்துக் கொள்ள வேண்டும். அதோடு கட்டணமாக பெரியவர்கள் ரூ.2,000, குழந்தைகள் ரூ.1,000 மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலர் கட்டணங்கள் செலுத்தி, தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஒருமுறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி வரை அந்த கட்டணம் செல்லுபடி ஆகும். பயணம் செய்யும் தேதியில், சென்னை விமான நிலையம் வரும்போது, குடியுரிமை சோதனை பிரிவில, அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்காக தனி கவுன்டர்கள் இருக்கும்.

அந்த கவுன்டர்களில் சென்று, அங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம், அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு குடியுரிமை அதிகாரிகளின் நீண்ட நேர கேள்விகள் இல்லாமல் உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டு, பயணிகள் வேகமாக தங்கள் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்று விடலாம்.

அதேபோல், வருகை பயணிகளும், இதேபோன்று நீண்ட வரிசையில் நிற்காமல், நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ள தனி கவுன்டர்கள் மூலம், குடியுரிமை சோதனையை, குறைந்த நேரத்திலேயே முடித்துவிட்டு, அடுத்ததாக தங்களுடைய உடமைகளை எடுத்து விட்டு வெளியில் செல்வதற்காக, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு சென்று விடலாம். ஆகஸ்ட் மாதத்தில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இத்திட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வருகின்றன.

Advertisement

Related News