தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து டெல்லி செல்ல ரூ.33 ஆயிரம் விமான டிக்கெட் ரூ.93,000 ஆக உயர்த்தி விற்பனை: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘விஸ்தாரா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது ரூ.33 ஆயிரமாக காட்டப்படும் கட்டணம், திடீரென ரூ.93 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நடக்கிறது’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் விவாதத்தில் ஒன்றிய அரசையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
Advertisement

அதைத் தொடர்ந்து நேற்று, விமான டிக்கெட் கட்டண முறைகேடு குறித்து அவையில் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். நேற்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும், திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல விஸ்தாரா விமானத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். விஸ்தாரா ஏர்லைன்ஸ் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் ஆன்லைன் சாப்ட்வேரை டாடாவின் டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது.

முன்பதிவு செய்யும் போது ரூ.33 ஆயிரமாக டிக்கெட் விலை காட்டப்படுகிறது. ஆனால், கட்டணம் செலுத்த செல்லும் போது ‘பிழை’ என வந்து, உடனே டிக்கெட் கட்டணம் ரூ.93 ஆயிரம் அல்லது ரூ.78 ஆயிரம் என உயர்த்திக் காட்டப்படுகிறது. விமான டிக்கெட் ரத்து மற்றும் ரீபண்ட் விவகாரங்களில் மட்டுமே விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நடக்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதை சபாநாயகர் ஓம்பிர்லாவும் ஆமோதித்தார். ‘‘தயாநிதிமாறன் அவைக்கு சுட்டிக்காட்டியிருப்பது தீவிரமான விவகாரம். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்’’ என்றார். உடனே, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ‘‘விமான பயணிகள் நலனில் டிஜிசிஏ அக்கறை கொண்டுள்ளது. மூத்த உறுப்பினர் தயாநிதிமாறன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து நிச்சயம் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்போம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’’ என உறுதி அளித்தார்.

Advertisement