தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை உட்பட 4 நகரங்களில் மட்டுமே நடக்கும் 12வது சீசன் புரோ கபடி ஆக. 29ம் தேதி தொடக்கம்

மும்பை: புரோ கபடி போட்டியின் 12வது தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக புரோ கபடி போட்டி ஒவ்வொரு அணிக்கு என உள்ள 12 நகரங்களிலும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு குறிப்பிட்ட நகரங்களில் போட்டி நடக்கின்றன. 11வது சீசன் ஐதராபாத், நொய்டா, புனே என 3 நகரங்களில் மட்டும் நடந்தன. இந்நிலையில், புரோ கபடி 12வது தொடருக்கான கால அட்டவணை நேற்று வெளியானது. இந்த முறை விசாகப்பட்டினம், சென்னை, ஜெய்பூர், டெல்லி என 4 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
Advertisement

முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஆக.29ம் தேதி முதல் செப் 11ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2வது கட்ட ஆட்டங்கள் செப்.12 முதல் செப் 28ம் தேதி வரை ஜெய்பூரில் நடக்கும். 3வது கட்ட ஆட்டங்கள் செப்.29 முதல் அக்.12ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருக்கின்றன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் அக்.13 முதல் அக்.23ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளன. போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 2 ஆட்டங்கள் நடைபெறும். டெல்லியில் மட்டும் கடைசி கட்டத்தில் தலா 3 ஆட்டங்கள் நடத்தப்படும்.

பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.விசாகப்பட்டினத்தில் தொடங்கும் புரோ கபடியின் முதல் நாள், முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகளும், 2வது ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்-புனேரி பல்தன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆட்டங்கள் நடைபெறும் நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அட்டவணை கடைசிக் கட்ட மாறுதலுக்கு உட்பட்டது என்று புரோ கபடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement