தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை சுட்டுப் பிடித்தது காவல்துறை

 

Advertisement

சென்னை: சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விஜயகுமாரின் காலில் சுட்டு பிடித்துள்ளார். ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் காவலர் தமிழரசன் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, இந்திராணி நகர் ரயில் நிலையம் அருகே நவம்பர் 20 ஆம் தேதியன்று மவுலி என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கெளதம், நிரஞ்சன் ஆகிய இருவர் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரவுடி விஜயகுமாரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி விஜயகுமார் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகுமாரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது, விஜயகுமார் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ரவுடி விஜயகுமாரின் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி விஜயகுமார் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisement

Related News