சென்னை - திருச்சி இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு: விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்
சென்னை: சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை திருச்சிக்கு அனுப்பி வைக்க விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.
Advertisement
Advertisement