தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இன்று ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் 2024 பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே 18ல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, ஆசிரியர் பணிக்கு தேர்வான பட்டதாரிகளின் தகுதிப் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.

Advertisement

இதற்கிடையே அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு பதவி உயர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சு பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் தற்போது 2,511 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் இன்று (செப்டம்பர் 3) பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதில் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் நாளையும் (வியாழன்) கலந்தாய்வு நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்த கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்துடன் நேரில் வரவேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

Related News