தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தெருநாய் தொல்லை: ஒவ்வொரு பகுதியிலும் நாய் காப்பகங்கள் அமைக்க கோரிக்கை

சென்னை: தெருநாய்களின் தொல்லை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக தண்டையார்பேட்டை சேனியம்மன், திலகர் நகர், குடிசை மாற்று வாரிய பகுதிகளில் மற்றும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட பெரும் அச்சம் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

தெருநாய்களை பிடித்து செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்திவிட்டு மீண்டும் தெருக்களில் விட்டுவிடுவதாக தெரிவிக்கின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறும் மக்கள், நாய்களுக்கு என்று ஒவ்வொரு பகுதியிலும் காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டிலேயே நாய்க்கடி பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது.

25,000க்கும் மேற்பட்டோர் சேலத்தில் நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போன்று தமிழ்நாட்டிலும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News