தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை-இலங்கை இடையே 2 ஏர்இந்தியா விமானங்கள் திடீர் ரத்து

சென்னை: சென்னை-இலங்கை இடையே இயக்கப்படும் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர், தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் டிரான்சிட் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 12 மணிக்கு புறப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும்.
Advertisement

அதன் பின்பு அந்த விமானம், இலங்கையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டும். ஆனால், நேற்று சென்னை- இலங்கை, இலங்கை- சென்னை ஆகிய 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போதிய பயணிகள் இல்லாததால் இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளின் விமான டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோல் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த விமானத்தை இணைப்பு விமானமாக பயன்படுத்தி, சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், தோகா போன்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

Related News