தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் திடீர் சோதனை..!!

சென்னை: சென்னை புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புழல் சிறை. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 212 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் முதல் பகுதியில் குற்றவாளிகளும், இரண்டாம் பகுதியில் ரிமாண்ட் செய்யப்பட்ட கைதிகளும், பெண்களுக்கென பிரத்யேக சிறையும் என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய தனி இடம் இருக்கிறது.
Advertisement

இதுதவிர தியான மண்டபம், சமையலறை, நூலகம், ஆம்பி தியேட்டர், ஆடிட்டோரியம், ஜெயில் கொர்ட், வீடியோ கான்பரன்சிங் வசதி, உயர் பாதுகாப்பு பகுதி, உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பொது இசை கட்டமைப்பு, புத்துணர்ச்சி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், புழல் சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் இன்று காலை புழல் சிறைக்கு சென்றனர். அங்கு சிறைவாசிகளுக்கான வசதிகள், உணவு தரம் குறித்து நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் சிறைவாசிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு சிறை, பெண்கள் சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

Related News